15548. ஆசீர் பெற்ற இரத்த ஊற்றே

1 ஆசீர் பெற்ற இரத்த ஊற்றே,
இவ்வுலகில் இரங்கியே,
இறை மகன் இயேசுவாக,
உந்தன் தழும்பால் குணமானோம்,
தூர திரிந்தோனாய் நின்றேன்,
வேதனைகள் துன்பம் சேர்ந்தது,
குற்றமற்ற ஆட்டின் இரத்தம்,
கொண்டு கழுவினால்தா சுத்தமாவேன்.

பல்லவி:
வெண்மை பனிபோல் வெண்மை பனிபோல்,
குற்றமற்ற ஆட்டின் இரத்தத்தால்,
என்னை கழுவினால் சுத்தமாவேன்.

2 முள்ளிலான கிரீடம் பூண்டார்,
அவர் சிலுவையில் வெற்றி கொண்டார்,
கோர பாடு வேதனைத்தாங்கி,
அவர் பட்ட பாடு வீணே போகுமோ?
என்னை ஆங்கே கொண்டே செல்ல,
இங்கே செய்த பாவம் நீங்க,
சிலுவையில் தந்த இரத்தம், கொண்டு
கழுவினால்தான் சுத்தமாவேன். [பல்லவி]

3 அப்பா எங்கோ திரிந்தலைந்தேன்,
எப்போதும் மனம் போன போக்கெல்லாம்,
இரத்தாம்பரத்தின் சிவப்பாய்,
தண்ணீர் போதா அதை சுத்தமாக்கிட,
உந்தன் ஊற்றை அண்டி நிற்கிறேன்,
முற்றும் வாக்குதத்தம் நம்பியே,
உந்தன் அன்பின் தூய இரத்தம்,
கொண்டு கழுவினால்தான் சுத்தமாவேன். [பல்லவி]

Text Information
First Line: ஆசீர் பெற்ற இரத்த ஊற்றே
Title: ஆசீர் பெற்ற இரத்த ஊற்றே
English Title: Blessed be the fountain of blood
Author: Eden R. Latta
Translator: S. John Barathi
Refrain First Line: வெண்மை பனிபோல் வெண்மை பனிபோல்
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [ஆசீர் பெற்ற இரத்த ஊற்றே]
Composer: Henry S. Perkins
Key: D Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us