15784. பிள்ளைகளே, உங்களை படைத்தவரை மறவாதீர்

1 பிள்ளைகளே கனம் தந்து,
உங்களைப்படைத்தோரை,
இவ்விளவயதிலே இன்றே,
சோதனை தோன்றுமுன்.

2 ஞானமாய் நீயும் அண்டிடு,
துக்கிக்கும் நாள் முன்னே,
வாலிப இன்பம் கடந்து,
வலிமை போகுமுன்.

3 நாவிற்கினிய பந்திகள்,
இல்லாமல் போகுமே,
செவியும் யாவும் மறந்தே,
இன்பாடலின்பமும்.

4 உன் வாழ்வின் தங்க காலமே,
வயோதிபம் கொல்லும்,
உபாதை சோர்வு வேதனை,
மரணம் நெருங்குமே.

5 உன் கண்களில் இருள் சூழ்ந்தே,
யாவும் மறைந்திட,
உன்னை தேற்றிட யாதுமின்றி,
விண்ணின் பேரொளியுமே.

6 ஆண்டவர் கண்கள் காண்பாயோ?
முன் நிற்கக்கூடுமோ?
மரணம் உன்னை அண்டியே,
சேர்ந்தே அணைத்திட.

7 வெள்ளி இழைகள் உதிர்ந்திட,
உன் தேகம் வீழ்ந்திட,
சென்றே கலந்தே மண்ணுடன்,
தன் சொந்த இடத்திலே.

8 மா சுமை பாரம் சுமந்திட்டே,
அசுத்தமாகவே,
ஆண்டவர் கோபத்தண்டையில்,
மோட்சம் அண்டாமலே.

9 உன் பலவீன கைகளால்,
நீ என்ன செய்வாயோ?
மரண ஓலம் கேட்குமே,
உன்னையே கொண்டோட.

10 ஆண்டவர் நாம சிந்தையே,
தேவை எந்நேரமும்,
அதை விட்டோடி செல்லாமல்
நேசித்தே வாழ்ந்திடு. ஆமேன்

Text Information
First Line: பிள்ளைகளே கனம் தந்து
Title: பிள்ளைகளே, உங்களை படைத்தவரை மறவாதீர்
English Title: Children, to your creator God
Author: Isaac Watts
Translator: S. John Barathi
Meter: C.M.
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [பிள்ளைகளே கனம் தந்து]
Composer: John Bacchus Dykes
Key: G Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us