15774. நைந்த என் ஆத்துமத்திற்கு புகலிடம் நீரே

1 நைந்த என் ஆத்துமத்திற்கு,
புகலிடம் நீரே,
என் துன்ப நேரத்திலுமே,
என் நம்பிக்கையும் நீரே நீர்தாமே.

2 பயம் என்னை சூழ்ந்தாலுமே,
பற்றிக்கொள்வேன் நான் உம்மை,
உம் பாதம் வைத்தேன் பாரம் வேதனையும்
ஊற்றுவேனே நான் அங்கே.

3 நான் உம்மிடம் ஏறெடுப்பேன்,
நீர்தான் என் ஆறுதல்,
உம் வார்த்தை இன்ப தீர்வாமே,
என் நோய்க்கும் ஒளஷதமுமாகுமே.

4 சந்தேகம் சோர்வும் நெருக்க,
பயந்தேன் உம்மை நோக்க,
உம் தேற்றுதல் காணாமலே,
விஸ்வாசம் குன்றி அஞ்சினேனே நான்.

5 எங்கே நான் செல்வேன் நீரின்றி
என் பற்று வேரில்லை,
என் ஆன்மா உம்மில் சார்ந்திட,
வீழ்ந்தேன் உம் பாதம் சாஷ்டாங்கமாக.

6 அழைத்தீரே நீர் உம்மண்டை
வீணேபோமோ? நான் வந்திட்டால்
கண் காணாமல் இருப்பீரோ?
நான் கெஞ்சும் போது ஆண்டவா.

7 கருணை கொண்டே நீர் கேட்பீரே,
என் வேதனை நான் காண்பேன்
உந்தன் காருண்யம் என் வியாகுலம்
அங்கே உம் பாதம் வைப்பேனே.

8 உம் தயவின் கிருபாசனம்
நான் இளைப்பாரவே,
உம் பாதம் நின்று உம் சித்தம் நான்
செய்தென்றும் காத்திருப்பேனங்கே.

Text Information
First Line: நைந்த என் ஆத்துமத்திற்கு
Title: நைந்த என் ஆத்துமத்திற்கு புகலிடம் நீரே
English Title: Dear refuge of my weary soul
Author: Anne Steele
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: ST COLUMBIA
Meter: C.M
Key: E♭ Major
Source: Irish melody
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us