15763. நாமும் ஆற்றண்டை சேர்வோமா?

1 நாமும் ஆற்றண்டை சேர்வோமா?
தூதர் கால்கள் சென்ற பூமி,
என்றும் மின்னும் பளிங்காக,
நம் ஆண்டவர் சிம்மாசனம்,

பல்லவி:
ஆம் நாம் ஆங்கே ஒன்றாய் சேர்வோம்,
அவ்வழகான அழகான ஊற்று,
தூதரோடு சேர்ந்தே நாமும்
ஆண்டவர் சன்னதி முன்பாக.

2 நாமும் கரையோரம் வந்து,
அந்த வெள்ளி ஊற்றை கண்டு,
போற்றி பாடி தொழுதேற்றி,
நல் வெண்ணங்கி கிரீடமும், [பல்லவி]

3 அங்கே வந்ததும் நம் பாரம்,
எல்லா துன்பத்தையும் வைத்தே,
கிருபை நம்மை மீட்கும் பாரேன்,
அந்த நாள் முழுதும் தொழுவோம், [பல்லவி]

4 மகிழ் கொண்டு வீசும் ஊற்று,
காண்போம் ஆண்டவரின் முகம்,
தூயோர் நித்ய வாழ்வு வாழ,
இன்ப பாடல்கள் கேட்குமே, [பல்லவி]

5 வேகம் நாமும் அங்கே சேர்வோம்,
ஓயும் நம் பியாணம் அன்று,
மகிழ்கொள்ளும் நமதுள்ளம்,
நாமும் சாந்தமாய் பாடிடுவோம். [பல்லவி]

Text Information
First Line: நாமும் ஆற்றண்டை சேர்வோமா?
Title: நாமும் ஆற்றண்டை சேர்வோமா?
English Title: Shall we gather at the river
Author: Robert Lowry
Translator: S. John Barathi
Refrain First Line: ஆம் நாம் ஆங்கே ஒன்றாய் சேர்வோம்
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [நாமும் ஆற்றண்டை சேர்வோமா?]
Composer: Robert Lowry
Key: D Major
Copyright: Public Domain



Media
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us