15730. தம் மென்மையாலே தேடி

1 தம் மென்மையாலே தேடி,
என் பாவம் நோயும் தீர்க்க,
தன் தோளின்மீது தாங்கி
தம் மந்தை சேர்த்தாரே,
விண்தூதர் பண் இசைக்கவே,
வான் ஓசை கேட்கும் நேரமே,

பல்லவி:
என்னை ஏற்ற அன்பு, இரத்தத்தாலே மீட்டு,
மீண்டும் என்னை மந்தை சேர்த்ததே,
என்னை மீண்டும் மந்தை சேர்த்ததே.

2 என் காயத்தோடே கண்டார்,
நல் எண்ணை இரசம் வார்த்தார்,
என் காதில் மெல்ல சொன்னார்,
நீ எந்தன் சொந்தமே,
நான் எங்கும் கேளா இன்பமே,
என் துன்பம் யாவும் நீங்கிற்றே, [பல்லவி]

3 கூர் ஆணி காயம் காட்டி,
தம் சொந்த இரத்தம் சிந்தி,
முள் கிரீடம் ஈன சின்னம்,
என் பாவம் போக்கவே,
நான் பாவியாயிருந்துமே,
மா வேதனை எனக்காக, [பல்லவி]

4 அச்சன்னதியில் சேர்ந்தேன்,
பிரகாசமாக தோன்ற,
மா விந்தை காட்சியாலே,
மெய் ஆசீர் உணர்ந்தேன்,
ஆ நித்யகாலம் போலவே,
போதாது காலம் போற்றிட, [பல்லவி]

5 இக்காலம் செல்ல செல்ல,
எல்லாம் இப்போது ஓய்ந்து,
நல் காலைக்காய் நான் சாய்ந்து,
பிரகாசம் வேண்டியே,
அவர் நம்மை அழைப்பாரே,
தம்மோடு என்றும் தங்கிட, [பல்லவி]

Text Information
First Line: தம் மென்மையாலே தேடி
Title: தம் மென்மையாலே தேடி
English Title: In Tenderness He Sought Me
Author: W. Spencer Walton
Translator: S. John Barathi
Refrain First Line: என்னை ஏற்ற அன்பு, இரத்தத்தாலே மீட்டு
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [தம் மென்மையாலே தேடி]
Composer: A. J. Gordon
Key: A Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us